Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் பாட்டிமா... வருத்தத்தோடு ஈஸ்டர் கொண்டாடிய அமலாபால்
திருவனந்தபுரம்: விரைவில் இயக்குநர் விஜயை கரம் பிடிக்க இருக்கிறார் நடிகை அமலாபால். கல்யாணக் கனவுகளில் அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்க, பாவம் அவரோ தனது பாட்டியை நினைத்தபடி சோகமாக ஈஸ்டர் கொண்டாடினாராம்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி படம் எதிர்மறையான ஓப்பனிங்கைக் கொடுக்க மைனா படத்தால் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
அதனைத் தொடர்ந்து விக்ரம், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த 'நிமிர்ந்து நில்' படம் வெளியானது. விரைவில் தனுஷுடன் நடித்த வேலையில்லாத பட்டதாரி ரிலீசாகவுள்ளது.
இதற்கிடையே தெய்வத் திருமகள் பட வாய்ப்பு மூலம் அறிமுகமான இயக்குநர் விஜயை வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய இருக்கிறார் அமலாபால்.
ஈஸ்டர் கொண்டாட்டம்...
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட ஈஸ்டர் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அங்கே தனது குடும்பத்தாருடன் ஈஸ்டர் கொண்டாடினார்.
என் பாசத்திற்குரிய பாட்டி...
தனது ஈஸ்டர் கொண்டாட்டங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார் அமலாபால். அதில் தனது பாட்டியை குறித்த தனது நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.
மலரும் நினைவுகள்...
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ‘பழைய ஈஸ்டர் கொண்டாட்டங்களை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை.
எதுவுமே ஈடில்லை...
எதுவுமே உங்கள் இடத்தை இப்போது நிரப்பவில்லை பாட்டிமா. நீங்கள் என் மீது செலுத்திய அந்த அபரிமிதமான அன்பிற்கு எதுவுமே ஈடாகாது' எனத் தெரிவித்துள்ளார் அமலாபால்.