Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமானார் அஞ்சலி!
எங்கோ மாயமாகிவிட்டார் என்று கூறப்பட்ட நடிகை அஞ்சலி புதிய தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சித்தி கொடுமை என்று கூறிவிட்டு ஹைதராபாத் போய்விட்ட நடிகை அஞ்சலி அடிக்கடி 'மாயமாகிக்' கொண்டிருக்கிறார்.
சென்னை வர மறுப்பு
குறிப்பாக சென்னைப் பக்கம் தப்பித் தவறிக் கூட வருவதில்லை என்று உறுதி பூண்டவர் போல, நீதிமன்ற சம்மன்களைக் கூட கண்டு கொள்ளாமல் உள்ளார்.
இரண்டாவது முறை
கடந்த சில மாதங்களாக அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட யாருக்கும் தெரியாமல் போனது. ஆந்திராவில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற அத்தனை பேரும் அஞ்சலி போனை எடுக்கவில்லை என்றே தகவல் பரப்பினர்.
மீண்டும் நடிப்பு
இந்த நிலையில் தான் மீண்டும் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் அஞ்சலி. தான் ஹைதராபாதில்தான் இருப்பதாகவும், விரைவில் புதிய படம் நடிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்பு
தன்னைப் பற்றி தவறான செய்திகள் வருவதாகவும், நிறைய வாய்ப்புகள் வந்தும் நல்ல கேரக்டர் வேண்டும் என்பதால் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
தெலுங்கில்..
தான் அடுத்து நடிக்கும் படம் தெலுங்கில் தயாராவதாகவும், அதில் தன் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
கவர்ச்சியாக
"கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். அதே நேரம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிப்பேன். தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறேன்," என்றார்.