twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாமனாரின் பேச்சு வெட்கப்படும்படி இருக்கிறது: அபு ஆஸ்மியின் மருமகள் நடிகை ஆயிஷா

    By Siva
    |

    மும்பை: பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மியின் பேச்சுக்கு அவரது மருமகளும், நடிகையுமான ஆயிஷா தாக்கியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் என்னவென்றால் ஆண்கள் என்றால் தவறு செய்யத் தான் செய்வார்கள். பாலியல் பலாத்காரம் செய்வதற்கு எல்லாம் தூக்கிலிடுவதா என்று கேட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து முலாயம் கட்சியைச் சேர்ந்த அபு ஆஸ்மியோ ஒருபடி மேலே சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறினார்.

    Ayesha Takia's reaction to father-in law Abu Azmi's sexist remark

    இது குறித்து அபு ஆஸ்மியின் மருமகளும், பாலிவுட் நடிகையுமான ஆயிஷா தாக்கியா ட்விட்டரில் கூறுகையில்,

    என் மாமனார் பற்றி நான் படிப்பது உண்மை என்றால் நானும் என் கணவர் ஃபர்ஹானும் வெட்கப்படுகிறோம். அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டார்கள். ஆனால் இந்த விவகாரம் உண்மை என்றால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    எந்த பெண்ணாவது அது திருமணமானவராக இருக்கட்டும், ஆகாதவராக இருக்கட்டும் அவர் சம்மதித்தோ, சம்மதம் இல்லாமலோ ஒரு ஆணுடன் சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவரையுமே தூக்கிலிட வேண்டும் என்றார் அபு ஆஸ்மி. நினைத்ததை செய்து, சுதந்திரமாக செயல்படும் மருமகளை வீட்டில் வைத்துக் கொண்டு அவர் இப்படி பேசி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

    English summary
    Samajwadi party leader Abu Azmi's sexist remark doesn't go well with his daughter-in law Ayesha Takia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X