Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என் மீது உள்ள பொறாமையில் வதந்தியை பரப்பிவிடுகிறார்கள்: சமந்தா
சென்னை: நான் பெரிய படங்களில் நடிப்பதால் பொறாமையால் சிலர் வதந்திகளை பரப்பிவிடுகிறார்கள் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
டோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. தற்போது அவரது நேரம் மிகவும் நன்றாக உள்ளது. அம்மணி கோலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் குறித்த வதந்திகள் பற்றி சமந்தா விளக்கம் தெரிவித்துள்ளார்.
அஞ்சான்
அஞ்சான் பட விளம்பரங்களில் சமந்தாவின் புகைப்படம் இல்லாததால் அவர் கோபத்தில் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சாக கிடந்தது.
சமந்தா
லிங்குசாமி-சூர்யாவுடன் சேர்ந்து பணியாற்ற பல காலம் காத்திருந்தேன். தற்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்து அவர்களுடன் பணியாற்றி வருகிறேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
வதந்தி
நான் அஞ்சான் பட விளம்பரங்கள் குறித்து கோபமாக உள்ளதாக வரும் தகவல்கள் எல்லாம் வெறும் வதந்தியே. அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சமந்தா.
பொறாமை
நான் பெரிய படங்களில் நடிப்பதால் சிலர் என் மீது உள்ள பொறாமையால் என்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று சமந்தா கூறினார்.
விஜய், அஜீத்
சமந்தா தற்போது விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சமந்தா தான் நாயகி என்று கூறப்படுகிறது.