Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூர்யாவுடன் ஜோடி சேர ஆசை: ஈரான் நடிகை விருப்பம்
சென்னை: நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடக்க வேண்டும் என்று ஈரானின் கவர்ச்சி நடிகை மர்யம் ஸகாரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதற்காக ஈரானை சேர்ந்த மரியம் ஸகாரியா என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'சூர்யாவுடன் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது' என்றார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது,
கரீனா கபூருடன் ஆட்டம்
இந்தியில் தில் மேரா என்ற பாடலுக்கு கரீனா கபூருடன் ஏஜென்ட் வினோத் படத்தில் ஆடினேன். தமிழில் ஏற்கனவே நகரம் என்ற படத்தில் குத்தாட்டம் ஆடி இருக்கிறேன்.
சோர்வே தெரியவில்லை
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட கேட்டார்கள். சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சூர்யா என்னிடம் மிகவும் நட்புடன் பழகினார். அவருடன் ஆடியபோது வேலை செய்கிறோம் என்ற சோர்வே தெரியவில்லை.
நடனம் ஆடுவதில் தான் ஆர்வம்
ஏற்கனவே பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இப்படத்தில் அவரது சகோதரர் ராஜு சுந்தரத்துடன் பணியாற்றினேன். நான் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகை, நடனம் ஆடுவதில்தான் ஆர்வம்.
ஜோடி சேர ஆசை
ஆனால் சூர்யாவுடன் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது. இவ்வாறு மரியம் ஸகாரியா கூறினார்.