Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மீண்டும் அரசியலுக்கு வருவேன்... நடிகை பூஜாகாந்தி பேச்சால் கன்னட அரசியலில் பரபரப்பு
பெங்களூர்: சினிமா வேலைகளில் கொஞ்சம் பிசியாக இருந்ததாகவும், விரைவில் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் நடிகை பூஜாகாந்தி.
தமிழ் மற்றும் கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூஜாகாந்தி. கன்னடத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பூஜாகாந்தி, திடீரென அரசியலில் குதித்தார். முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்.
தீவிர அரசியலில் இறங்கிய பூஜாகாந்தி ஜனதாதளம் (எஸ்) கட்சியிலிருந்து விலகி, ஹாவேரியில் நடைபெற்ற கர்நாடக ஜனதா கட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்டு எடியூரப்பா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் அக்கட்சியிலிருந்தும் வெளியேறிய பூஜாகாந்தி, பி.எஸ்.ஆர். காங்கிரஸ் ஸ்ரீராமுலு முன்னிலையில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்தாண்டு நடந்த கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெறும் 1,815 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.
பின்னர் சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பிய பூஜாகாந்தி, தற்போது மீண்டும் அரசியலில் இறங்குவேன் எனக் கூறி கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை பூஜா காந்தி பாகல்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தோல்வி...
கடந்த சட்டசபை தேர்தலில், பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன்.
அபினேத்ரி பட வேலைகள்...
பின், அபினேத்ரி திரைப்படத்தை நானே இயக்கி, நடித்து கொண்டிருந்ததால், அரசியலில் ஈடுபட முடியவில்லை.
பெண்கள் பிரச்சினைகள்...
ராய்ச்சூர் மாவட்ட பெண்கள், தங்களின் பிரச்னைகளை என்னிடம் கூறியபோது, என்னால் முடிந்தவரை தீர்த்து வைத்தேன். மக்களுடன், நான் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன்.
மீண்டும் வருவேன்...
விரைவில் மீண்டும் அரசியலில் இறங்குவேன். எந்த கட்சி என்பது பற்றி விரைவில் முடிவை அறிவிப்பேன்.
வழிகாட்டி இல்லை...
அரசியலில் எனக்கு சரியான வழிகாட்டி இல்லாததால், சற்று கடினமாக உள்ளது''என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!