Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதுவராக செயல்படவில்லை - நயன்தாரா, த்ரிஷா மறுப்பு
சென்னை: நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சிசிஎல்லின் சென்னை ரைனோஸ் அணிக்கு விளம்பரத் தூதராக செயல்படவில்லை என்று நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் 'சிசிஎல்' நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது.
இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோர் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
திரிஷா ஏற்கனவே இந்த அணியில் தூதுவராக இருந்துள்ளார். நயன்தாராவை தூதுவராக நியமித்து பிறகு நீக்கி விட்டனர்.
இப்போது மீண்டும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர்களிடம் கேட்டபோது மறுப்பு தெரிவித்தனர்.
நயன்தாரா கூறுகையில், "சிசிஎல் கிரிக்கெட் அணிக்கு தூதுவராக இருக்கும்படி கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதற்கு என்னிடம் நேரமும் இல்லை. தற்போது எனது முழு கவனமும் நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில்தான்," என்றார்.
த்ரிஷா கூறும்போது," ஏற்கெனவே நான் தூதுவராக இருந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை யாரும் என்னை அழைக்கவில்லை," என்றார்.