twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நய்யாண்டி பிரச்சினை எனக்கு நல்லதாகவே முடிந்துள்ளது! - நஸ்ரியா

    By Shankar
    |

    'நய்யாண்டி' படத்தில் 'டூப்' நடிகையை வைத்து தொப்புள் காட்சியைப் படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷன் வரை போன நஸ்ரியா, அதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு நஸ்ரியாவை படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்கி வருகின்றனர்.

    இனி அப்படியெல்லாம் பிரச்சினை கிளப்ப மாட்டேன் என்று இயக்குநர்களைச் சந்தித்து உறுதி கூறி வருகிறார் நஸ்ரியா.

    Nazriya answers Nayyandi issues

    இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தார் நஸ்ரியா. இவர்தான் அந்தப் படத்தின் நாயகி.

    எடுத்த எடுப்பிலேயே அவரிடம், நய்யாண்டி சர்ச்சையில் பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக சொல்கிறீர்களே... என்று கேட்டனர் பத்திரிகையாளர்கள்.

    இதற்கு பதிலளித்த அவர், "இது திருமணம் எனும் நிக்காஹ் பட நிகழ்ச்சி. இங்கு இந்தப் படம் தொடர்பாக மட்டுமே கேளுங்க," என்றார்.

    பின்னர், இதே கேள்வியை அவரிடம் தனியாக கேட்டபோது, "நான் எந்த படத்தில் இருந்தும் நீக்கப்படவில்லை. ஒப்பந்தமான படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சர்ச்சை காரணமாக நல்ல பட வாய்ப்புகளை இழந்து விட்டதாகவோ என்னை புறக்கணிப்பதாகவோ கருதவில்லை. 'நய்யாண்டி' படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் எனக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

    என் குணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. நான் எந்த மாதிரி கேரக்டரில் நடிப்பேன் எதில் நடிக்க மாட்டேன் என நய்யாண்டி படசர்ச்சை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. டைரக்டர்கள் என்னை புதுப்படங்களில் நடிக்க அணுகும்போது என் கேரக்டர் மற்றும் காட்சி விவரங்களை விளக்கமாக கூறிவிடுகின்றனர். படப்பிடிப்பு துவங்கிய பிறகு எந்த சிக்கலும் ஏற்படவில்லை," என்றார்.

    English summary
    Actress Nazriya refused to answer questions on Nayyandi issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X