Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சும்மா கதை கட்டி விடறாங்க.. நம்ப வேணாம்!- ப்ரியா ஆனந்த்
சென்னை: என்னையும் அதர்வாவையும் இணைத்து சும்மா கதை கட்டி விடுகிறார்கள். யாரும் நம்ப வேண்டாம் என்கிறார் ப்ரியா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் அசல் தமிழ் நடிகை என்ற பெருமைக்குரியவர் ப்ரியா ஆனந்த். பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காதவர்.
வை ராஜா வை, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்பட ஆறேழு படங்களில் நடித்து வருகிறார்.
கிசுகிசு
இப்போது ஒரு காதல் கிசுகிசுவில் அவர் பெயர் பலமாக அடிபடுகிறது. அதர்வாவும் ப்ரியாவும் தீவிரமாகக் காதலிப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகின்றன.
நட்பு
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ப்ரியா ஆனந்த், "நானும் அதர்வாவும் இரும்புக் குதிரை என்ற படத்தில் நடிக்கிறோம். நட்புடன் பழகுகிறோம்.
எலியும் பூனையுமாக
படப்பிடிப்பில் ஒன்றாக நடிக்கும் நடிகரும் நடிகையும் எலியும் பூனையுமாகவா இருக்க முடியும்.... சாதாரணமாக சிரித்துப் பேசுவது தவறா.. இதற்கே என்னையும் அவரையும் இணைத்து கதைகட்டி உள்ளனர். நம்ப வேண்டாம்.
டீசன்டானவர்
அதர்வா டீசன்டானவர். அதனால் இந்த கிசுகிசுக்களை அவரும் பெரிதுபடுத்தவில்லை. படப்பிடிப்பில் நான், அதர்வா மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் அமர்நாத் மூவரும் ஒன்றாக இருப்போம். நான் எதுவும் பேசமாட்டேன் என்று நினைத்து இப்படி கிளப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.
பிஸி
இந்த ஆண்டு நிறைய நல்ல படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. இதனால் இந்தி படங்களில் நடிக்க முடியவில்லை.
கேமரா முன்னால் மட்டும்
எனக்கு கேமரா முன்னால் மட்டும்தான் நடிக்கத் தெரியும். நிஜத்தில் நான் நானாகவே இருப்பேன். இதனால்தான் நிறைய பேருக்கு என்னை பிடிக்கிறது," என்றார்.