Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தன் முதல் ஹீரோ விஜய்க்கு மீண்டும் ஜோடியானார் ப்ரியங்கா சோப்ரா!
தன் முதல் ஹீரோவான விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறார் பாலிவுட்டின் டாப் நடிகையான ப்ரியங்கா சோப்ரா.
நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தீவிரமாகத் தேடி வந்தனர்.
புதுமுகமாக இல்லாமல் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
தீபிகா படுகோனே
ஆரம்பத்தில் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
பெரிய சம்பளம்
தற்போது, கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில், அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர். படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்த படுகோனே அதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டார். ஆனால் படத்திற்கான பட்ஜெட்டை விட இது அதிகம் என்பதால் முயற்சியைக் கைவிட்டனர்.
ப்ரியங்கா சோப்ரா
அடுத்து, நடிகை பிரியங்கா சோப்ராவை படத்தில் நடிப்பதற்கு கேட்டனர். படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் தமிழில் நடிக்க ஆர்வமானார் பிரியங்கா சோப்ரா. அவரது சம்பள தொகையும் நிம்மதியைத் தருவதாக இருந்தது.
தமிழன்
பிரியங்கா சோப்ரா தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார். விஜய்தான் அவரது முதல் ஹீரோ. அதுமட்டுமல்ல, இருவரும் இணைந்து ஒரு பாடலையும் சொந்தக் குரலில் பாடினர் அந்தப் படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.