Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேட்காமல் "கிளிக்"கினால் எப்படி... பிரியங்கா சோப்ரா கோபம்
மும்பை: ரசிகர்கள் தனது அனுமதியைப் பெறாமலேயே புகைப்படம் எடுப்பதாகவும், அது நாகரீகம் அல்ல என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
நடிகர் நடிகையர் என்றால் ரசிகர்களிடம் ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. கையில் கிடைக்கும் கேமரா அல்லது செல்போன் கேமராவில் கிளிக்கி விடுகின்றனர் பார்த்தவுடன்.
இதைத்தான் தற்போது குறை சொல்லியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்து டிவிட்டரிலும் பொங்கியுள்ளார் பிரியங்கா.
அதிருப்தி...
போகும் இடமெல்லாம் தனக்கு இப்படிப்பட்ட ரசிகர்களால் தர்மசங்கடம் ஏற்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
எல்லாம் பிளாஷ் மயம்...
எங்கு போனாலும் கையில் உள்ள கேமரா, செல்போன் உள்ளிட்டவற்றால் தன்னைச் சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுக்கிறார்கள் என்று அலுத்துக் கொண்டுள்ளார்.
முரட்டுத்தனமான செயல்...
இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், இப்படி அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பது மிகவும் முரட்டுத்தனமான செயல்.
அனுமதி கேட்க வேண்டும்...
பொது இடத்தில் நாம் சாப்பிடும்போதும், அமர்ந்திருக்கும்போதும், தூங்கும்போதும் திடீரென வந்து நமது அனுமதியைக் கூட கேட்காமல் புகைப்படம் எடுப்பது என்ன பழக்கம். அனுமதி கேட்க வேண்டாமா என்று கேட்டுள்ளார் பிரியங்கா.
கோபம் மட்டும்....
பல நேரங்களில் இப்படி புகைப்படம் எடுப்போரை பிரபலங்கள் பளார் என அறைவது உண்டு. நல்லவேளை டிவிட்டர் மூலம் கோபத்தைக் காட்டியதோடு விட்டாரே பிரியங்கா.. அவரைப் பாராட்டலாம்.