Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இத்தாலியில் காதலரை ரகசியமாக மணந்த நடிகை ராணி முகர்ஜி
ரோம்: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை ரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும், மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை காதலித்து வந்தார். ஆதித்யா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர்.
ஆதித்யாவும், ராணியும் காதலித்தது பாலிவுட் அறிந்த கதை.
காதல்
ஆதித்யாவும், ராணியும் தங்கள் காதலை பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தனர். அவர்களை பொறுத்த வரை தான் அது ரகசியம். ஆனால் பாலிவுட்டில் அனைவருக்கும் அவர்கள் விவகாரம் பற்றி தெரியும்.
சத்ருகன் சின்ஹா
யஷ் சோப்ரா மறைவுக்கு பிறந்த நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா மேடையில் பேசுகையில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார். அது ராணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
கல்யாணம்
ராணியும், ஆதித்யாவும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகவும் ராணியின் மார்க்கெட் பாதிக்காமல் இருக்க அதை வெளியே தெரிவிக்காமல் இருப்பதாகவும் பாலிவுட்டில் பேச்சு அடிபட்டது.
எப்பொழுது?
ஆதித்யா, ராணி முகர்ஜி எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வார்களோ என்று பாலிவுட்டில் பலரும் கேட்கத் துவங்கிவிட்டனர்.
ஒருவழியாக
இத்தனை நாட்களாக இழுத்தடித்த ஆதித்யாவும், ராணியும் ஒருவழியாக நேற்று இரவு இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.