Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கணவர் சம்மதிச்சிட்டார்... திருமணமானாலும் நடிப்பைத் தொடர்வேன்! - சமீரா
திருமணம் ஆனால் என்ன... தொடர்ந்து நடிக்க என் கணவர் ஒப்புக் கொண்டததால் நடிப்பை தொடரப் போகிறேன், என்று அறிவித்துள்ளார் சமீரா ரெட்டி.
வாரணம் ஆயிரம், வெடி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சமீரா ரெட்டி, சமீபத்தில் தன் நீண்ட நாள் காதலர் தொழிலதிபர் அக்ஷய்வர்தேயை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
மீண்டும்
கடந்த மூன்று மாதங்களாக திருமண வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்த சமீரா, மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். தனக்கு மீண்டும் வாய்ப்பு வேண்டும் என வெளிப்படையாகக் கேட்டுள்ளார்.
மாற்றம்
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "திருமண வாழ்க்கை என் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சி
ஒரு கன்னட படத்தின் படப்பிடிப்பு ஒன்றில்தான் நானும் அவரும் சந்தித்து காதல் வசப்பட்டோம். கணவர் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளார். என் சமையலை ருசித்து சாப்பிடுகிறார்.
திருமணமானால் என்ன...
திருமணமானதும் நடிகைகளின் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு விடும் என்று கருதினேன். எனக்கும் அப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது போல் நிகழவில்லை. மீண்டும் நடிக்கப் போகிறேன். நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்.
தொழில் அதிபர்
கரீனா கபூர், ஜூகி சாவ்லா, மாதுரி தீட்சித் போன்றோர் திருமணத்துக்கு பிறகும் சாதிக்கின்றனர். எதிர்காலத்தில் ஒரு தொழில் அதிபராகும் எண்ணமும் உள்ளது," என்றார்.