Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கன்னடத்தில் பிஸியாகும் சரத் மகள் வரலட்சுமி!
கன்னடத்தில் ஹிட்டான சுதீப்பின் மானிக்யா படத்தில் நடித்ததன் மூலம், கன்னடப் படங்களில் பிஸியாகியுள்ளார் சரத்குமார் மகள் வரலட்சுமி.
'போடா போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் வரலட்சுமி.
இப்படத்தை தொடர்ந்து விஷாலுடன் இணைந்து 'மதகஜராஜா' படத்தில் நடித்தார். அந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவராமலேயே உள்ளது.
பாலா படத்தில்
பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்துக்காக தன் உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம்மாகும் முயற்சியில் உள்ளாராம்.
கன்னடத்தில் வெற்றி
இந்நிலையில், வரலட்சுமி கன்னட சினிமாவில் கால்பதித்துள்ளார். ‘நான் ஈ' புகழ் சுதீப் ஜோடியாக ‘மானிக்யா' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். கடந்த மே 1ம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.
தொடரும் வாய்ப்புகள்
இப்படத்தில் நாயகியாக நடித்த வரலட்சுமிக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அவர் மேலும் சில கன்னட படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில்தான் பெரிய பிரேக் கிடைக்கவில்லை... கன்னடத்தில் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பட வாய்ப்புகளை ஒப்புக் கொண்டு வருகிறாராம்.
மிர்ச்சி ரீமேக்
தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘மிர்ச்சி' படத்தின் ரீமேக்தான் ‘மானிக்யா'. கன்னடத் திரையுலகில் அதிக பொருட்செவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்ற இந்த படம், சுதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் கர்நாடகாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.