Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'
படம் மற்றும் அதன் நாயக - நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று.
நடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம் கொட்டியது என்றெல்லாம் அவர்களின் பிஆர்ஓக்கள் பரபரப்பு தகவல் பரப்புவார்கள்.
சரி, தெரிஞ்ச விஷயம்தானே என அவற்றையெல்லாம் செய்தியாக்கி இலவச பப்ளிசிட்டியும் தருவார்கள் மீடியாக்காரர்கள்.
கொடுக்கிறது டுபாக்கூர் தகவலாக இருந்தாலும், அதையும் சரியாக செய்ய வேண்டாமா... நம்ம நடிகை வேதிகாவுக்கு பப்ளிசிட்டி தருவதாகக் கூறிக்கொண்டு, சமீபத்தில் அவரது ஆட்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்கள்...
"சில தினங்களுக்கு முன் சிங்காரவேலன் என்ற மலையாளப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது வேதிகா தவறி குளத்தில் விழுந்துவிட்டார். இருந்தாலும் தைரியமாக சமாளித்து கரையேறி, ஷூட்டிங்கைத் தொடர்ந்தார். அவர் தைரியத்தை அனைவரும் பாராட்டினார்கள்' என்று செய்தி பரப்பிவிட்டனர்.
ஆனால் சிங்காரவேலன் என்ற படம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதியே வெளியாகிவிட்டது.
அதைவிடக் கொடுமை, அதன் க்ளைமாக்ஸ் காட்சி கடந்த மே மாத இறுதியில் படமாக்கப்பட்டதாம்.
வேதிகா இப்போது நடித்துக் கொண்டிருப்பது வசந்த பாலனின் காவியத் தலைவன் படத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை அம்பலமானதும், மலையாள பத்திரிகைகள் ரவுண்டு கட்டி கிண்டலடித்து வருகின்றன வேதிகாவை!