twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதையில் பாய்ந்த ரசிகர்கள்!… அலறி ஓடிய பூனம் பாண்டே!!

    By Mayura Akilan
    |

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடனமாடிய இந்தி நடிகை பூனம் பாண்டேயை ரசிகர்கள் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தகவல் வெளியாகியுள்ளது.

    பெங்களூர் இரவு விடுதியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பூனம்பாண்டே அதிர்ச்சியில் இருக்கிறார்.

    பணத்திற்காக போதை ஆசாமிகள் முன்பு நடனமாடவேண்டாம் என்றும் அவர் நடிகைகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    பணம் கொடுத்தார்கள் போனேன்…

    பணம் கொடுத்தார்கள் போனேன்…

    புத்தாண்டையொட்டி பெங்களூர் ‘கிளப்' ஒன்றில் என்னை நடனமாட அழைத்து இருந்தனர். இதற்காக நிறைய பணம் கொடுத்தார்கள்.

    மேலே பாய்ந்த ரசிகர்கள்

    மேலே பாய்ந்த ரசிகர்கள்

    அங்கு ஏராளமான ஆண்கள் குடிபோதையில் என்னை சுற்றி இருந்தார்கள். நான் மேடை ஏறி ஆட துவங்கினேன். நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருந்தபோது சிலர் திடீரென மேடையை சுற்றி போடப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடி வந்தார்கள்.

    பலாத்கார முயற்சி

    பலாத்கார முயற்சி

    எல்லோருமே குடித்து இருந்தனர். என்னுடைய கையை பிடித்து இழுத்து அத்துமீறி நடந்தார்கள். என்னை பலாத்காரம் செய்யும் ஒரே நோக்கமே அவர்களிடம் இருந்தது.

    ஓடினாலும் துரத்தினார்கள்

    ஓடினாலும் துரத்தினார்கள்

    நான் அந்த முரட்டு ரசிகர்களின் பிடியில் இருந்து தப்பித்து ஓடினேன். ஆனாலும் விடாமல் துரத்தி வந்தனர். நான் தங்கி இருந்த அறைக்கும் துரத்தி வந்தனர்.

    ஒரு வழியாக தப்பித்தேன்…

    ஒரு வழியாக தப்பித்தேன்…

    கிளப் நிர்வாகத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்த ஆட்கள் போதுமானதாக இல்லை. அவர்களால் குடிகாரர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டேன்.

    பணத்துக்காக ஆடாதீங்க!

    பணத்துக்காக ஆடாதீங்க!

    நான் மற்ற நடிகைகளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் பணத்துக்காக யாரும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆட போகாதீர்கள் என்று கடைசியில் அட்வைஸ் வேறு செய்துள்ளார் பூனம் பாண்டே.

    அடடா!... பூனம் பாண்டேவிற்கு இந்த ஞானம் இணையதளத்தில் தனது அரை குறை படத்தை அப்லோடு செய்யும் முன்னர் வந்திருக்கக் கூடதோ?

    English summary
    The seductress swears that she will not perform on New Year ’s Eve ever again after horrifying experience with drunken men at a recent bash Poonam Pandey was scared to her death and the nightmarish experience has left her scarred mentally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X