Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வித்யா பாலனின் ஆஸ்கர் கனவு!
மும்பை: பத்மஸ்ரீ விருது கிடைத்தது போல, எனக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் நாளும் தொலைவில் இல்லை என்கிறார் நடிகை வித்யாபாலன்.
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவுக்கான படங்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.
இவ்விழாவுக்கான இந்திய திரைப்பட உலகின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யா பாலன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்திய படங்களின் பெயர்களை இந்நிகழ்ச்சியில் அறிவித்தார்.
பேட்டி
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வித்யா பாலன், ‘எனது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஷாதி கே சைட் எஃபெக்ட்ஸ்' படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ஆரம்பம் முதல் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு பிரமிக்கத்தக்கது.
பத்மஸ்ரீ
ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன். ஆஸ்கார் விருதை வாங்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது. அதேபோல், பத்மஸ்ரீ விருது வாங்குவேன் என்றும் நினைத்துப் பார்த்ததே கிடையாது.
ஆஸ்கரும் கிடைக்கும்
ஆனால், கடவுளின் தயவால் பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்தது. இதேபோல், ஆஸ்கார் விருது வாங்கும் நாளும் இன்னும் அதிக தூரத்தில் இல்லை' என்றார்.
நோ பாலிடிக்ஸ்
அரசியலில் இறங்கும் நோக்கம் ஏதும் உள்ளதா? என்று கேட்டபோது, 'அப்படி எந்தத் திட்டமும் இல்லை," என்றார்.