Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகை லின்ட்சே லோஹனை வீட்டில் இருந்து விரட்டிய டைட்டானிக் ஹீரோ?
கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ தனது வீட்டுக்கு வந்த நடிகை லின்ட்சே லோஹனை விரட்டியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
டைட்டானிக் படம் மூலம் பிரபலம் ஆனவர் லியோனார்டோ டிகேப்ரியோ. தற்போது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக
உள்ளார் அவர். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான உல்ப் இன் தி வால் ஸ்ட்ரீட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.
இந்நிலையில் கேப்ரியோ தனது வீட்டில் செக்கர்ஸ் விளையாட தனது நண்பர்களை அழைத்துள்ளார். அப்போது நடிகை லின்ட்சே லோஹனும் கேப்ரியோ வீட்டுக்கு வந்துள்ளார். நடிக்க வந்த புதிதில் தனது நடிப்புத் திறமைக்காக பாராட்டப்பட்டவர் லின்ட்சே. அதன் பிறகு ஓரினச்சேர்க்கை, மது, போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். மேலும் அவ்வப்போது சிறை சென்றும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோஹனின் பிரச்சனைகளால் அவரை பார்ட்டிக்கு அழைக்க பிரபலங்கள் தயங்கும் நிலையில் தான் கேப்ரியோ வீட்டுக்கு அவர் வந்தார். வந்த சில நிமிடங்களில் உட்கார இடம் இல்லை, என் அருகில் இவர்கள் இருக்கக் கூடாது, அவர்கள் இருக்கக் கூடாது என்பது போன்று பிரச்சனைகளை கிளப்ப ஆரம்பித்தார் லோஹன். இதை பார்த்த கேப்ரியோ தனது நண்பர்களிடம் லோஹன் வந்த 15வது நிமிடத்திலேயே அவரை வெளியே அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.