Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாலியல் புகார் கொடுத்தது ஏன்?- ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்
மும்பை: என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நெஸ் வாடியா மீது பாலியல் புகார் தந்தேன். யாரையும் பழிவாங்க அல்ல, என்று ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது பழைய ஆண் நண்பர் மற்றும் கிரிக்கெட் வியாபார கூட்டாளி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். இதில் நெஸ் வாடியா கைதாகக் கூடும்.
புகாருக்குப்பின் ப்ரீத்தி ஜிந்தா அளித்துள்ள அறிக்கையில், "இது எனக்கு கடினமான நேரம். அன்று நடந்த சம்பவத்தால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இந்தப் புகாரை யாரையும் புண்படுத்துவதற்கான நான் புகார் அளிக்கவில்லை. என்னை காப்பாற்றுவதற்காகவே புகார் அளித்துள்ளேன்.
இந்த விவகாரம் குறித்து மீடியாக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து என்னுடைய தனித்தன்மைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ப்ரீத்தி ஜிந்தாவுக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கான ஆதாரங்களை, வான்கடே ஸ்டேடியத்தின் சிசிடிவி கேமரா பதிவுகளிலிருந்து பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் மும்பை போலீசார்.