இளையராஜா இசையில் முதல் முதலாக தாமரை!

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2012, 13:34 [IST]
இளையராஜாவின் இசையில் முதல் முறையாக பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கவிஞர் தாமரை.

கவுதம் மேனனின் கேம்பில் எப்போதும் தாமரைக்கு இடமுண்டு. அவரது முதல் படமான மின்னலே-யிலிருந்து பாடல் எழுதுகிறார் தாமரை.

இப்போது கவுதம் மேனன் இயக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திலும் இந்த வாய்ப்பு தொடர்கிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இளையராஜா இசையில் தாமரை பாடல் எழுதுவது இதுவே முதல் முறை. ஏற்கெனவே இரு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் இளையராஜா.

பெப்சி பிரச்சினையால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினை தீர்ந்ததும், இந்த கோடை விடுமுறையின் மறக்க முடியாத ஜில் ரொமான்டிக் படமாக வரவிருக்கிறது நீதானே என் பொன் வசந்தம்.

English summary
Woman poet Thamarai has got a chance to work with Ilayaraja for the very first time in Goutham Menon's Neethane En Pon Vasantham.
User Comments
TheDevil 17 Feb 2012 01:57 pm
‘நீதானே என் பொன்வசந்தம்’ பற்றி இனி டெய்லி ஒரு நியூஸ் எதிரபார்க்கலாமா?
[ கருத்தை எழுதுங்கள் ]
   
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST