தூத்துக்குடி: தூத்துக்குடி தியேட்டரில் திரைப்படத்தின் நடுவே செக்ஸ் காட்சிகள் காட்டியது தொடர்பாக உரிமையாளர், ஆபரேட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டரில் திரைப்படத்தின் நடுவே ஆபாச காட்சிகள் காட்டப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அந்த தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அப்போது திரைப்படத்தின் ஊடே ஆபாச காட்சிகள் அடங்கிய பிட் படங்கள் காட்டப்பட்டதை வருவாய் துறையினர் கண்டுபிடித்தனர். உடனே படத்தை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்தி தியேட்டர் உரிமையாளர், ஆபரேட்டரை கைது செய்தனர்.


















