மனைவி-குழந்தையை அபகரித்துக் கொண்டார் 'உயர்திரு 420' சினேகன்!- எஞ்ஜினீயர் புகார்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 22, 2011, 10:08 [IST]
சென்னை: தன் மனைவி மற்றும் குழந்தையை அபகரித்துக் கொண்டார் என பிரபல பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கம், சக்தி நகர், எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). என்ஜினீயரான இவர், தனியாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜமுனா கலாதேவி (27).

இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், "நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். எனது மனைவி நடனக் கலைஞர். கீழ்கட்டளையிலும், வேளச்சேரியிலும் நடனம் கற்றுக்கொடுக்கும் பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார்.

நாங்கள் காதல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி எங்களது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம். எங்களுக்கு சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறாள். யு.கே.ஜி. படிக்கிறாள்.

'உயர்திரு 420' சினேகன்!

பாம்பு புற்றுக்குள் கருநாகம் புகுந்ததுபோல, நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் எங்கள் குடும்ப நண்பரானது, எங்கள் இல்லற வாழ்க்கையையே இப்போது சீரழித்துவிட்டது. எனது மனைவியின் நடன பயிற்சி பள்ளியை சினேகன் திறந்து வைத்தார். அதுமுதல் எங்கள் குடும்ப நண்பரானார். எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குனராக உருவாக்குவதாக சினேகன் ஆசைவார்த்தை காட்டினார்.

எனது மனைவி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. சினேகன் மூலம் நடன இயக்குனர் வாய்ப்பு வந்ததால், எனது மனைவிக்கு அதில் விருப்பம் ஏற்பட்டது. நானும் அதை எதிர்க்கவில்லை. சினேகன் நடித்த 'உயர்திரு 420' என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார். நாளடைவில் அவர்களுக்கிடையே உள்ள பழக்கம் தவறாக போனது.

கடத்திவிட்டார் சினேகன்...

எனது மனைவியை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. நாளடைவில் எனது மனைவி, சினேகன் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நானும், குழந்தை நலன் கருதி இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. இப்போது எனது குழந்தையையும், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் கடத்தி சென்றுவிட்டனர்.

எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசியும், எனது மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில், எனது மனைவி திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச்சென்று எனது குடும்பத்தை சீரழித்த சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

புகார் கொடுத்துவிட்டு நிருபர்களிடம் பேசிய பிரபாகரன், "சினேகனிடம் போய்விட்ட என் மனைவி இப்போது ரூ.20 லட்சம் பணம் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரதட்சணை கொடுமை புகார் கொடுப்பேன் என்றும் மிரட்டுகிறாள். குழந்தையையும் என்னிடம் தர மறுக்கிறார். என்னையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுகிறார்கள்" என்றார்.

இவர்களின் தவறான உறவுக்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, `எனது மனைவியும், சினேகனும் ரூ.24 ஆயிரம் பில் வரும் அளவுக்கு செல்போனில் பேசியுள்ளார்கள். அதுதான் ஆதாரம். இருவரும் ஒன்றாக சுற்றுவதை பலரும் பார்த்துள்ளனர். நானே விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டுக்கு சென்றபோது, அங்கு என் மனைவி, சினேகனுடன் இருப்பதைப் பார்த்தேன். வேறென்ன சொல்ல..." என்றார்.

இந்த புகார் மனு மீது மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை, பிரபாகரனையும், அவரது மனைவியையும் அழைத்து கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் கூறினார்கள்.

பிரபாகரனின் மனைவி கண்ணீர் பேட்டி

பிரபாகரனின் மனைவி ஜமுனா கலாதேவி மடிப்பாக்கத்தில் அவரது தாயார் வீட்டில் வசிக்கிறார். அவரிடமும், நிருபர்கள் செல்போனில் பேசி கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், "எனது குழந்தையை, எனது கணவர்தான் என்னிடம் அனுப்பாமல் சிறை வைத்திருந்தார். அது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். அவரிடம் விவாகரத்து கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதிலிருந்து தப்புவதற்காக என் மீதும், சினேகன் மீதும் அபாண்டமான பழி சுமத்தி எனது கணவர் பொய் புகார்," கொடுத்துள்ளார் என்றார்.

அவர் எதற்காக பொய் புகார் கொடுக்கிறார்? எதற்காக விவாகரத்து கேட்டீர்கள்? என்று கேட்டதற்கு 'அது தனிப்பட்ட விஷயம்' என்றார்.

English summary
An Engineer, residing at Madippakkam has lodged a complaint on lyricist Snehan for having illegal affair with his wife. According to the complaint, Snehan has taken over the engineer's wife and child in his custody.
User Comments
rocketraja 29 Nov 2011 11:15 am
ஹை ஜாலி
Iridium Cobra 23 Nov 2011 10:04 am
கள்ளதொடர்பு பெண்கள், கணவன் & அவரின் குடும்பத்தாரின் மீது பொய் வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை வழக்குகளைப்போட்டு, போலீஸ் உதவியுடன் கணவனை மிரட்டி லட்சகணக்கில் பணத்துடன் விவாகரத்தை பெற்றுக்கொண்டு கள்ளகாதலனுடன் போக நினைக்கும் பெண்கள், அவர்களின் குடும்பத்தார் & கள்ளக்காதலன் ஆகியோரின் மீது, கணவனும் IPC 497 பிரிவின் கீழ் கள்ளதொடர்பு வழக்கு, கணவன் போட்ட நகைகளை தராமல் ஏமாற்றிய வழக்கு, கணவனின் தாயை வன்கொடுமை செய்த வழக்கு என போட்டுதாக்குவதால், பொய் கேஸ்கள போடும் சிறுக்கிகள் பொத்திக்கொண்டு போகிறார்கள்.
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST