
சுப்பிரமணிய சிவாவை நினைவிருக்கிறதா... திருடா திருடி எனும் திடீர் வெற்றிப் படத்தையும், அதற்கடுத்து பொறி, யோகி மற்றும் சீடன் ஆகிய மூன்று சுமார் படங்களையும் கொடுத்த இயக்குநர் இவர்.
தனது அடுத்த படத்தில் இவரே ஹீரோவாகிவிட்டார். இந்தப் படத்துக்கு 'உலோகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அடுத்து நான் இயக்கும் படம் உலோகம். படத்தின் நாயகனும் நான்தான். ஜெயமோகனின் நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் இது. இந்தப் படத்துக்கு வசனத்தையும் ஜெயமோகனே எழுதியுள்ளார்," என்றார்.
இது ஒரு ஆக்ஷன் படமாம். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டார் சிவா. அடுத்த வாரம் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.










