Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

திரைப்பட அதிபர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஹைகோர்ட் தடை

Posted by:
Published: Thursday, May 24, 2012, 16:23 [IST]

திரைப்பட அதிபர் சங்க அட்ஹாக் கமி்ட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர் கூட்டவிருக்கும் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திரைப்பட அதிபர் சங்க அட்ஹாக் கமி்ட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர் வரும் 30ம் தேதி சங்க பொதுக்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க பொருளாளர் கலைப்புலி எஸ். தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கடந்த ஏப்ரல் 15ம் தேதி தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளராகிய நான் ஆகிய மூவரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அட்ஹாக் கமிட்டியில் எடுத்த முடிவை எதிர்த்து தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 30ம் தேதி பட அதிபர் சங்க பொதுக்குழு கூடும் என இப்ராகிம் ராவுத்தர் அறிவித்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி திரைப்பட அதிபர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதித்ததோடு வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

English summary
Chennai high court has banned producers association' general body meet to be held on may 30. Court has ordered so after Kalaipuli S. Dhanu filed petition asking it to ban the meet.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST