எந்த ஒரு படத்திற்குமே இப்படி ஒரு குழப்பம் வந்திருக்காது. படத்திற்கு பூஜை போடும்போதே தலைப்பை முடிவு செய்துவிடுவார்கள். ஆனால் அஜீத்- விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு தினம் ஒரு தலைப்பை சூட்டி உலாவ விடுகின்றனர்.
தொலைக்காட்சியில் சினிமா குவிஸ் நடத்தும் வெங்கட் பிரபு சமீபத்தில் இது குறித்து கேள்வி கேட்டதற்கு, படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டதாகவும், அதை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று கூறி தப்பித்துவிட்டார்.
முதலில் சுராங்கனி, அப்புறம் வலை, இப்போது சிவந்த மண் என வரிசையாக பெயர் சூட்டுகின்றனர். அதை விட கொடுமை பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வேறு போடுகின்றனர். படத்தின் தலைப்பை வைக்கவே இவ்வளவு குழப்பம் என்றால் படத்தின் கதை எப்படி இருக்கும் பார்க்கிற மாதிரி இருக்குமா? என்ற கேள்வி சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆகஸ்டில் சுராங்கனி
தினம் ஒரு பரபரப்பு செய்தி. அஜித்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகும் படப்பிடிப்பில் காயம் என்றெல்லாம் ஒருபுறம் செய்தி வெளியாகி வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட்டில் இந்த படத்திற்கு சுராங்கனி என்று பெயர் வைத்து பர்ஸ்ட் லுக் ரிலீசானது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களோ இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.


































