பெங்களூர்: கன்னட நடிகர் துனியா விஜய் தனது மனைவி நாகரத்னாவை விவகாரத்து செய்கிறார்.
துனியா என்ற கன்னட படம் மூலம் பிரபலமானவர் விஜய். அதில் இருந்து அவர் பெயர் துனியா விஜய் என்றாகிவிட்டது. அவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நாகரத்னா என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். துனியா விஜய் குடும்பத்தில் பிரச்சனை என்று அண்மை காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர், நாகரத்னா தனது பெற்றோரை ஒழுங்காக கவனித்துக் கொள்வதில்லை என்றும், தனக்கு மென்ட்டல் டார்ச்சர் தருவதாவும் அவர் தெரிவித்துள்ளதாக டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஜய்க்கும், பிரபல கன்னட நடிகையான சுபா பூஞ்சாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதால் தான் அவர் விவகாரத்து செய்கிறார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.






















