twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கை படம் ஆகிறது

    By Siva
    |

    ஹைதராபாத்: தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்படவிருக்கிறது.

    தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் உதய்கிரண். பொய் படம் மூலம் கோலிவுட் வந்தவர் வம்பு சண்டை, பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உதய்கிரண் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    A film on actor Uday Kiran's life

    உதய் கிரணுக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். உதய் கிரணுக்கு படங்கள் கிடைக்காமல் இருக்க தெலுங்கு திரை உலகின் ஜாம்பவான்கள் சிலர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் குடும்ப பிரச்சனையும் அவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் உதய் கிரணின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது. உதய் முடிவுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் காரணம் என்று கூறப்பட்டதும் படத்தில் காண்பிக்கப்படுமாம்.

    English summary
    A movie will be made based on the life of actor Uday Kiran who committed suicide on january 5 at his apartment in Hyderabad.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X