Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கை படம் ஆகிறது
ஹைதராபாத்: தற்கொலை செய்து கொண்ட நடிகர் உதய் கிரணின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாரிக்கப்படவிருக்கிறது.
தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் உதய்கிரண். பொய் படம் மூலம் கோலிவுட் வந்தவர் வம்பு சண்டை, பெண் சிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் உதய்கிரண் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதய் கிரணுக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். உதய் கிரணுக்கு படங்கள் கிடைக்காமல் இருக்க தெலுங்கு திரை உலகின் ஜாம்பவான்கள் சிலர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் குடும்ப பிரச்சனையும் அவர் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உதய் கிரணின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது. உதய் முடிவுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் காரணம் என்று கூறப்பட்டதும் படத்தில் காண்பிக்கப்படுமாம்.