Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்க்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் நேரில் சந்தித்து ஆதரவு!
விஜய் - சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படத்துக்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவானது, ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்று ஆதாரங்கள் வெளியானதால் படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
அந்த சிக்கலை சரிகட்ட, எதிர்ப்பு காட்டிய கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வந்தனர் முருகதாஸும் விஜய்யும்.
லைக்கா நிறுவனம் இலங்கை தமிழருக்கு சொந்தமானது என்றும் ராஜபக்சேவுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் படக்குழு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இப் பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். லைகாவை எதிர்த்துப் போராட மாட்டேன் என்று கூறிவிட்டார் சீமான்.
ஆனால் முற்போக்கு மாணவர் முன்னணி அமைப்பின் மாறன் போன்றவர்கள், கத்தி, புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியாக விட மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சில மாணவர்கள் ஒன்று திரண்டு, விஜய்யை நேரில் போய்ச் சந்திக்க படக்குழுவினர் ஏற்பாடு செய்தனர். விஜய்யைச் சந்தித்த மாணவர்கள் படத்துக்கு தங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தனர்.