twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேஸ்புக்கில் தவறான தகவல்... போலீசில் ஆமீர்கான் புகார்

    By Shankar
    |

    மும்பை: பேஸ்புக்கில் தன்னைப் பற்றி தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது போலீசில் புகார் தெரிவித்தார் நடிகர் ஆமீர்கான்.

    பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சத்ய மேவ ஜயதே' என்ற பெயரில் டி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

    Aamir Khan lodges police complaint

    இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெண் கற்பழிப்பு தொடர்பாக விவாதம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சமூக அமைப்பிடம் நடிகர் ஆமீர்கான் பணம் வசூல் செய்து, அந்த பணத்தை மஸ்ஜித் பகுதியில் மசூதி கட்டவும், முஸ்லிம் இளைஞர்களின் நலனுக்காக வழங்கியதாவும் பேஸ்புக் சமூக வலை தளத்தில் தகவல் வெளியானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆமீர்கான் நேற்று முன்தினம் மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து தன்னை பற்றி அவதூறாக பேஸ்புக்கில் செய்தி வெளியிட்ட நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு கொடுத்தார்.

    English summary
    Actor Aamir Khan has lodged a police complaint on a person who spread wrong information about him through facebook.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X