Don't Miss!
- News 21 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்.. இன்று வெளியாகும் அறிவிப்பு?
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இந்தி பாடகர் அங்கித் திவாரி கைது
மும்பை: பிரபல இந்தி பின்னணி பாடகர் அங்கித் திவாரி பாலியல் பலாத்கார வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2013ம் ஆண்டில் வெளியான ஆஷிகி 2 ஹிட் இந்தி படத்தில் சுன் ரஹா ஹை என்ற பாடலை பாடி பிரபலம் ஆனவர் அங்கித் திவாரி. அவருக்கு நண்பர்கள் மூலம் 28 வயது பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் அங்கித் மற்றும் அவரது சகோதரர் அன்கூர் திவாரி ஆகியோர் கடந்த 6ம் தேதி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அங்கித் அந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்கித் மற்றும் அவரது சகோதரர் அன்கூர் ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். அந்த பெண்ணை மிரட்டியதற்காக அன்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி நடிகர் சல்மானின் கானின் நண்பரான நடிகர் இந்தர் குமார் 22 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.