Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
புதியதோர் உலகம் செய்வோம் படத்துக்கு அப்துல் கலாம் ஆலோசகர் பாராட்டு!
அப்துல் கலாமின் வழிகாட்டல்களின் அடிப்படையில் ஒரு புதிய படத்தை உருவாக்கியுள்ளார் ரஜினியின் நண்பரும் தயாரிப்பாளருமான நாகராஜன் ராஜா.
இந்தப் படத்துக்கு புதியதோர் உலகம் செய்வோம் என்று தலைப்பிட்டுள்ளார்.
லஞ்ச ஊழலை தடுத்து மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கும் சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
நித்தியானந்தம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு பிரவீன் இசையமைத்திருக்கிறார்.
அப்துல் கலாம் வழிகாட்டல்
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நாகராஜன் ராஜா பேசுகையில், "அப்துல் கலாமின் எழுச்சிமிகு வழிகாட்டல்களை பின்பற்றி வருபவன் நான். அவரது வார்த்தைகள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். அந்த அடிப்படையில்தான் இந்த புதியதோர் உலகம் செய்வோம் படத்தை எடுத்துள்ளேன்.
லஞ்சத்தை ஒழிக்க
லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் தங்கள் வீட்டில் இருந்தே அதை தொடங்கவேண்டும் என்றும், அதன் மூலம் நாட்டில் குற்றங்கள் குறையும் என்றும் கலாம் சொன்னார். அதை மையப்படுத்தி, தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளை வைத்து படத்தை எடுத்துள்ளோம்," என்றார்.
பொன்ராஜ்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் பேசியபோது, "இப்படத்தை நான் பார்த்தேன். முழுக்க முழுக்க இது ஜனரஞ்சகமான படம். படத்தில் உள்ள சிறப்பம்சங்களை அப்துல் கலாமிடம் சொல்லப் போகிறேன்.
கனவு
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு போகும் குழந்தைகள், தங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி தடுக்கும் அளவுக்கு காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
‘உறங்கும்போது வருவதல்ல கனவு; உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு' என்று சொல்வார் அப்துல் கலாம்.
அனைவரும் பார்க்கணும்
அதற்கேற்ப ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து பின்வாங்கக் கூடாது என்ற மையக்கருத்து கொண்ட இப்படத்தைப் பார்க்கும் குழந்தைகள் அறிவுபூர்வமாக செயல்படுவார்கள். எல்லா தரப்பினரும் பார்க்கும் படமாக இது இருக்கும்," என்றார்.
வில்லன்
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் கமலா தியேட்டர் உரிமையாளர் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.,