twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம் – தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

    |

    Actress Manoramma still in severe condition…
    சென்னை: நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது. அடுத்த 28 மணி நேரத்துக்கு மனோரமா தீவிர சிகிச் சைக்குள்ளேயே வைக்கப்பட்டு இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மனோரமாவுக்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். மூட்டுவலிக்கு அறுவைசிகிச்சை செய்தார். குளியல் அறையில் வழுக்கி விழுந்து தலையில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    தற்போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Actress Manoramma suffered again by the severe asphyxia and admitted in ICU ward in hospital.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X