Don't Miss!
- News 50 ஆடுகள்.. 100 கிலோ ஆட்டுக்கறி.. விடிய விடிய திண்டுக்கல் விருந்து.. மூக்கை துளைத்த "மட்டன் குழம்பு"
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பைசூலுக்கு உதவுகிறார்... வேறு அதிகாரி விசாரிக்கணும்! - போலீசார் மீது நடிகை ராதா பரபரப்புப் புகார்!
தயைரிப்பாளர் பைசூல் என்பவர் தன்னை செக்ஸ் மோசடி செய்துவிட்டார் என்று கூறி சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா, போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார்.
அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் கமிஷனரைச் சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீதே பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அப்போது, பைசூல் தன்னிடம் ரூ 50 லட்சம் மோசடி செய்ததற்கான ஆவணங்களைக் கொடுத்த ராதா, தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்," என்றார்.