Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வரதட்சணைக் கொடுமை.. கணவன் வீட்டு முன் 3வது நாளாக துணை நடிகை தர்ணா!
ஆவடியில் உள்ள கணவன் வீட்டின் முன் தொடர்ந்து 3 நாட்களாக இந்த தர்ணாவை நடத்தி வருகிறார்.
ஆவடி கோவர்த்தனகிரி கிருஷ்ணன் தெரு வில் வசிப்பவர் விஜயகுமார் (34). இவரது மனைவி கலைவாணி (31). தமிழில் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் கலைவாணி.
கலைவாணிக்கு பிறந்த குழந்தை இறந்தது. இதனால் கணவர் வீட்டில் அவரை சேர்க்க மறுத்துவிட்டனர். மேலும் வரதட்சணை கேட்டு கலைவாணியை மிரட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்குச் சென்ற கலைவாணியை மாமியார் மரகதம் மிரட்டி, அங்கிருந்து விரட்டியுள்ளார். இதையடுத்து கலைவாணி தனது தாய் பிரேமாவுடன் ஆவடி காவல்நிலையத்துக்குச் சென்று கணவன் வீட்டார் மீது வரதட்சணைப் புகார் கொடுத்தார்.
போலீசார் அந்தப் புகாரைப் பெறஅறு வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடை யில், கலைவாணி நேற்று முன்தினம் முதல் கணவர் வீட்டின் முன்பு தெருவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவரை உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் சமாதானப்படுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து இன்று 3வது நாளாக தர்ணாவில் கலைவாணி ஈடுபட்டுள்ளார்.