Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெய் கூட நடிக்கணுமா?: அலறியடித்து ஓடும் நடிகைகள்
சென்னை: ஜெய்யுடன் ஜோடி சேர்ந்தால் தங்கள் கெரியர் அம்பேலாகிவிடும் என்று நடிகைகள் அஞ்சுகிறார்களாம்.
அஞ்சலி ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதையடுத்து அவர்களுக்குள் காதல் என்று கோடம்பாக்கம் முழுவதும் பேச்சாக கிடந்தது. நான் யாரையும் காதலிக்கவில்லை ஜெய் விளம்பரத்திற்காக இப்படி செய்தியை பரப்புகிறார் என்று அஞ்சலி குற்றம் சாட்டினார்.
மேலும் இனி ஜெய்யுடன் சேர்ந்து நடிக்கவே போவது இல்லை என்றும் அஞ்சலி தெரிவித்தார்.
சித்தி பிரச்சனை
காதல் கிசுகிசு பரவிய நேரத்தில் அஞ்சலிக்கும், அவரது சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் தலைமறைவானார். பின்னர் அவராக வந்து காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். இதையடுத்து அவர் கோலிவுட் பக்கமே வராமல் ஆந்திராவிலியே உள்ளார்.
நஸ்ரியா
திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் நடிக்கையில் ஜெய்க்கும், நஸ்ரியாவுக்கும் செம காதல் என்று செய்திகள் வந்தன. இருவரும் படப்பிடிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.
தொப்புள்
ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நஸ்ரியா நய்யாண்டி படத்தில் தொப்புள் காட்சி விவகாரத்தை பெரிதாக்கி காவல் நிலையம் வரை சென்றார். பின்னர் இயக்குனரும் அவரும் சமாதானம் ஆகிவிட்டனர். தொப்புள் பிரச்சனையை அடுத்து நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்ய கோடம்பாகத்தினர் அஞ்சுகிறார்கள்.
திருமணம்
நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் பிரபலம் ஆனார். தற்போது அதே வேகத்தில் திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறார். அவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
ஜெய்
ஜெய்யுடன் நடித்தால் முதலில் அவருடன் காதல் அடுத்து ஏதாவது பிரச்சனையில் சிக்கி காணாமல் போய்விடுவோம் என்று நடிகைகள் அஞ்சுகிறார்களாம். இதனால் ஜெய்யுடன் நடிக்க கேட்டால் ஆளை விடுங்க சாமி என்று ஓடுகிறார்களாம்.
நடிகைகள்
ஜெய்யுடன் தற்போது நடித்து வரும் நடிகைகள் அவர் சிரித்து பேசினால் எங்கே தங்களையும் சேர்த்து காதல் கிசுகிசு வந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறார்களாம். இதனால் ஜெய் சிரித்துப் பேசினால் கூட நடிகைகள் வேண்டா வெறுப்பாகவே பேசுகிறார்களாம்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க