Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயன்தாராவைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவோடு டூயட் பாடப்போகும் ஜெய்...
சென்னை: ராஜாராணி படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த நடிகர் ஜெய் 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணனின் அடுத்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.
நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என தன் பன்முகத் திறமைகள் மூலம் பிரபலமானவர் ஆண்ட்ரியா. இவர் கௌதம் மேனனின் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது விஸ்வரூபம் -2, உத்தமவில்லன், அரண்மனை மற்றும் தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இது தவிர நடிகர் ஜெய் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படம் இவன் வேற மாதிரியைத் தொடர்ந்து இயக்குநர் சரவணன் இயக்கும் புதிய படமாகும்.
இது தொடர்பாக எங்கேயும், எப்போதும் பட இயக்குநர் சரவணன் கூறியதாவது :-
மாடர்ன் நாயகி...
எனது புதிய படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். நகரத்து கதைக்களத்தில் மிகவும் மாடர்னான பெண்ணாக நடிக்கிறார் ஆண்ட்ரியா.
காதல் பாதி, ஆக்ஷன் மீதி...
இப்படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். காதலும், ஆக்ஷனும் கலந்த கதைக்களம்.
தவறான தகவல்...
இப்படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்க முதலில் நான் அஞ்சலியை அணுகியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
பழைய படத்தின் தாக்கம்...
காரணம் ஏற்கனவே எங்கேயும், எப்போதும் படத்தில் நடித்த ஜெய்-அஞ்சலி ஜோடி பெரிதும் பேசப்பட்டது. எனவே, மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்தால் அப்படத்தின் தாக்கம் இதிலும் தெரியும்.
ஆண்ட்ரியாவுக்கான கதை...
அதனை நான் விரும்பவுமில்லை. அதோடு, இப்படத்தின் கதையை தயார் செய்யும் போதே ஆண்ட்ரியாவை மனதில் வைத்துத் தான் தயாரித்தேன்' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.