Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இன்கம்டாக்ஸ்காரங்க வந்தாதான் அஜீத் படம் தொடங்குமாமே!!
அஜீத்தின் அடுத்த படம் தொடங்குவது இன்கம்டாக்ஸ் அலுவலர்கள் கையில்தான் உள்ளதாம்...
அதென்ன... இன்கம்டாக்ஸ் பார்ட்டிகள் இங்கே எங்கே வந்தார்கள் என்கிறீர்களா?
எல்லாம் ஆரம்பம் படத்தின் வசூல் கணக்கை சரியாகக் காட்டாததால் வந்த தொல்லையாம்.
கைவிட்ட விஜய்
விஜய்யை வைத்து கில்லி, குஷி என இரண்டு வெற்றிப் படங்கள் எடுத்தவர் ஏஎம் ரத்னம். இந்தப் படங்கள் விஜய்யின் மார்க்கெட் மதிப்பை பெரிதும் உயர்த்தின. ஆனால் ரத்னம் பெரும் சிரமத்தில் சிக்கித் தவித்த போது அவர் விஜய்யிடன் போய் கால்ஷீட் கேட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருந்தார்.
நண்பன் படத்தில்...
இதற்காக விஜய் நடித்த 'நண்பன்' பட புரொடக்ஷன் வேலைகளைக் கூட தாமாக முன்வந்து செய்து கொடுத்தார் ரத்னம். அப்படியிருந்தும் விஜய் கண்டு கொள்ளவில்லை.
ஓடோடி வந்த அஜீத்
ஆனால் ரத்னம் கேட்காமலே ஓடிவந்து 'ஆரம்பம்' படத்திற்கு கால்ஷீட் கொடுத்தார் அஜீத். அந்தப் படம்தான் ஆரம்பம். இந்தப் படத்தில் பெரிய லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.
மீண்டும் கால்ஷீட்
இந்நிலையில் மீண்டும் ஏ.எம்.ரத்னத்திற்கே அஜீத் கால்ஷீட் கொடுத்தார். கவுதம் மேனன் இயக்கப்போகும் இந்தப் படம் விரைவில் தொடங்குகிறது.
ரூமைத் திறந்தாதான்..
ஆனால் 'ஆரம்பம்' பட ரிலீஸ் சமயம் ரெய்டு நடத்திய வருமானவரித்துறை 'வியாபார கணக்கு வழக்குகளை ஒப்படைத்தால் அலுவலகத்தைத் திறக்க முடியும்' என ரத்னத்தின் அலுவலகத்திற்கு 'சீல்' வைத்துவிட்டது.
இந்த அறைக்கதவு திறக்கப்பட்டால்தான் அஜீத்தின் புதுப்படம் தொடங்கும். வருமான வரித்துறை அதிகாரிகளை அழைத்து, கணக்கு வழக்குப் பார்த்து கதவு திறக்க காத்திருக்கிறாராம் ரத்னம்.