Don't Miss!
- Sports உண்மையை மறைத்த ஹர்திக் பாண்டியா.. ஆப்பு வைக்கப் போகும் ரோஹித்.. இந்திய அணியில் ட்விஸ்ட்
- Finance டிசிஎஸ் நிறுவனத்தில் COO சீட்டு காலி.. கே.கிருதிவாசன் எடுத்த அடேங்கப்பா முடிவு..!!
- Lifestyle உங்கள் வீட்டில் பல்லிகளின் தொல்லை அதிகமாக உள்ளதா? இனி கவலையே வேண்டாம்... இதோ விரட்ட எளிய வழிகள்..!
- News கட்டு கட்டாக ரூ 2.83 கோடி பணம்.. நாமக்கல் பரமத்தி வேலூரில் சிக்கிய கார்.. பரபரப்பு
- Technology Airtel ஓரம்போ.. 42ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. வெறும் ரூ.250-க்குள் அள்ளி கொடுக்கும் Jio..
- Automobiles கலர், சஸ்பென்ஷன் எல்லாமே மாறிடுச்சு!! பல்சர் பைக்கில் பஜாஜ் நிறைய வொர்க் பண்ணி இருக்கு!
- Travel அடிக்கிற வெயிலுக்கு கம்மி பட்ஜெட்டில இந்த குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களுக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமா?
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
ஒரு வழியாக சுந்தர் சி கதையை ஓகே செய்த அஜீத்!
கவுதம் மேனன் படம் முடிந்ததும், அஜீத்தை அடுத்து இயக்கப் போகிறவர் சுந்தர் சி.
ரஜினி, கமல், அஜீத், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களையெல்லாம் இயக்கியவர் சுந்தர் சி. காமெடி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும், அவ்வப்போது அதிரடி ஆக்ஷனும் தருவதில் கில்லாடி.
இப்போது அரண்மனை படத்தை இயக்கி வரும் சுந்தர், அடுத்து அஜீத்தை இயக்கப் போகிறார்.
சத்யா..
கவுதம் மேனன் இயக்கத்தில் இப்போது அஜீத் நடித்து வரும் படத்துக்கு சத்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இது வரும் தீபாவளிக்கு வரும் படம்.
கவுதமுக்கு முன்பே
இந்தப் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தின் இயக்குநர் சுந்தர் சிதான். இருவரும் ஏற்கெனவே இணைவதாகக் கூறப்பட்டது. ஆனால் ஸ்க்ரிப்டை முழுமையாக தயார் செய்தபிறகு தான் முடிவு செய்வதாக அஜீத் கூறியதாக தகவல் வெளியானது.
குஷ்பு
சுந்தர்.சி. மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அஜீத்-சுந்தர்.சி விரைவில் இணையவிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
உன்னைத் தேடி
சுந்தர்.சியும் அஜீத்தும் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியவர்கள்தான். அஜீத்தின் ஆரம்ப நாட்களில் அவரை வைத்து உன்னைத் தேடி என்ற படத்தை சுந்தர் இயக்கியிருந்தார். அது அஜீத்தின் கேரியருக்கு அப்போது பெரிதும் கைகொடுத்தது.