Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் தான் வில்லன், இல்ல நான் தான் வில்லன்: இது 'தல'-'தளபதி' கூத்து
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள அஜீத்தும், விஜய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்புகிறார்களாம்.
அஜீத் குமார் தன்னை வைத்து மங்காத்தா படம் எடுத்த வெங்கட் பிரபுவுடன் மீண்டும் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்யும் வெங்கட் பிரபுவுடன் படம் பண்ண ஆர்வமாக உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வெங்கட் பிரபு கூறுகையில்,
தல, தளபதி
நான் அஜீத் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் வெங்கட் பிரபு. அப்படி மட்டும் வெங்கட் படம் எடுத்தால் பல ஆண்டுகள் கழித்து அஜீத்தையும், விஜய்யையும் சேர்த்த பெருமை அவரைச் சேரும்.
சின்ன சிக்கல்
அஜீத்தும், விஜய்யும் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது அவருக்கு பெருமகிழ்ச்சி அளித்துள்ளது. ஆனால் வெங்கட்டுக்கு ஒரு சின்ன சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
வில்லன்
தல, தளபதி இரண்டு பேரும் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள். ஆனால் இருவருமே வெங்கட் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க விரும்புகிறார்கள்.
கதை
வெங்கட் அஜீத், விஜய்க்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு கதையை தயார் செய்து கொண்டிருக்கிறாராம். கதை தயாரானதும் அவர்கள் இருவரிடமும் கால்ஷீட் பெறவிருக்கிறார். வாழ்த்துக்கள் வெங்கட்!