Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தனுஷும் அக்ஷராவும் நம்ப ஒழுக்கமான, கட்டுப்பாடு மிக்க நடிகர்கள் - அமிதாப்
தனுஷும் அக்ஷராவும் மிகவும் கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமான நடிகர்கள் என பாராட்டியுள்ளார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்.
பால்கி இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ், அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நீலகிரியில் நடந்து வருகிறது.
தனுஷ் மற்றும் அக்ஷராவின் தொழில் நேர்த்தி குறித்து பெரிதும் சிலாகித்த அமிதாப் பச்சன், "இந்தப் படத்தில் தனுஷும் அக்ஷராவும் எனது சக நடிகர்கள். தென்னகத்துக்கே உரிய நேர்த்தியையும் ஒழுக்கத்தையும் அவர்களிடம் காண்கிறேன். மிகச் சிறந்த கலைஞர்கள்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் நடிப்பைப் பார்க்கப் பார்க்க அவர்களின் மீதான என் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது...
நீலகிரிக்கு பல முறை நான் ஷூட்டிங்குக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு அலுக்காத லொகேஷன் இது...," என்றார்.