Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சொல்லாமல் கொள்ளாமல் விலகிய அனிருத்- தயாரிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம்
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அனிருத். அவர் இசையமைத்து ஒரு படம் வெளியான உடனே, ஆன்ட்ரியாவுக்கு லிப் டு லிப் கிஸ்ஸடித்த படத்தை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டினார்.
அடுத்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ பாடல் உருவாக்கியதற்காக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அடுத்து, இப்போது தயாரிப்பாளரிடம் பிரச்சினை.
ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்துக்காக வாயை மூடி பேசவும் என்ற படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பாலாஜி மோகன். துல்கர் சல்மான் - நஸ்ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸும் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் வருண் மணியன்.
ஆனால் பின்னர் இசையமைக்காமல் விலகிக் கொண்டார் அனிருத். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அனிருத் மீது புகார் கொடுத்தார் வருண் மணியன்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக அட்வான்ஸை திருப்பித் தருவதாகக் கூறியுள்ள அனிருத், தனது தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில், தொடர்ச்சியான வேலைப் பளு காரணமாக வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை என்றும், இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் எழுதியுள்ள அனிருத், அடுத்த படத்தில் பணியாற்ற முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு ரூ 5 லட்சத்தை அட்வான்ஸாக பெற்றிருந்தார் அனிருத். அந்தத் தொகையை உடனடியாக திருப்பிக் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார் அவர்.