Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகைகள் அனுஷ்கா, ப்ரணிதாவை நெருக்கியடித்த ரசிகர்கள்- தடியைச் சுழற்றிய போலீஸ்!
ராஜமுந்திரி: ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
நடிகைகள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை விட அதிகம் காணப்படுவது ஜவுளிக்கடை, நகைக்கடை, கார் ஷோரூம் திறப்பு விழாக்களில்தான்.
இதற்காக கணிசமான சம்பளம் மற்றும் பரிசுகளைப் பெறுகிறார்கள்.
ஆந்திராவில் ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் புதிய ஜவுளிக் கடைகளை திறக்க அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை அழைத்திருந்தனர். இருவரையும் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி நின்றார்கள்.
அனுஷ்கா, ப்ரணிதா காரில் வந்து இறங்கியதும் அவர்களை காண கூட்டத்தினர் முண்டியடித்தனர். தடுப்பு வளைவை தாண்டி இரு நடிகைகளையும் தொட்டுப் பார்க்க முனைந்தனர்.
விழா அமைப்பாளர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அனுஷ்கா, ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினார்கள்.
இதில் சில ரசிகர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.