Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலு மகேந்திரா திரையில் காட்டிய காட்சி நிஜமான அதிசயம்!
பாலு மகேந்திரா தனது தலைமுறைகள் படத்துக்காக எழுதிய திரைக்கதை, நிஜத்திலும் நடந்தே விட்டது.
'தலைமுறைகள்' திரைப்படம் சிறந்த சமூக ஒருமைப்பாட்டுக்கான தேசிய விருதைப் பெற்றது.
இதற்காக அந்தப் படக் குழுவினர் சென்னை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவின் பிரமாண்ட படம் வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு தயாரிப்பாளரான சசிகுமாரும், படத்தில் நடித்தவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பத்திரிகையாளர்களும் அவ்வாறே தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.
பின்னர் சசிகுமார் பேசினார். அவர் கூறுகையில், "இந்தப் படத்தை நான் தயாரித்ததிற்காக மிகவும் பெருமைப்படுறேன். இந்தப் படத்துக்கு நிச்சயமாக விருது கிடைக்கும் என்று பாலுமகேந்திரா சார் சொன்னார். அவர் வாக்கு பலித்துவிட்டது.
ஆனால் அவர்தான் இல்லை. மேலும் படத்தில் அவர் வைத்த ஒரு காட்சி நிஜத்திலும் அப்படியே நடந்துவிட்டது. படத்தின் இறுதியில் பேரன் என்ற முறையில் அவரால் வளர்க்கப்பட்ட நான் விருது வாங்குவேன். அந்தக் காட்சியில் நான்தான் நடித்திருந்தேன்.
இப்போது நிஜமாகவே இத் திரைப்படத்திற்கான தேசிய விருதினை பாலு மகேந்திராவின் நிஜ பேரன் ஷ்ரேயான்தான் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றான். இது அவரே எதிர்பார்க்காத ஒரு பொருத்தமான நிகழ்வு. என்றென்றும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு பற்றிய செய்திகளும், விஷயங்களும் என் நினைவில் இருக்கும்," என்றார்.