Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பிரபலங்கள்
மும்பை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததற்காக பாலிவுட் பாடகர் அங்கித் திவாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்பே சில பாலிவுட் பிரபலங்கள் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ளனர்.
பலாத்கார வழக்கில் பாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இயக்குனர், நடிகர், பாடகர் என்று சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்படி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பிரபலங்களை பார்ப்போம்.
அங்கித்
ஆஷிகி 2 படத்தில் சுன் ரஹா ஹை என்ற பாடலை பாடி பிரபலம் ஆன அங்கித் திவாரி 28 வயது பெண்ண கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இன்று மும்பை வெர்சோவா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தர் குமார்
நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரான இந்தி நடிகர் இந்தர் குமார் 22 வயது மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஷைனி அஹுஜா
இந்தி நடிகர் ஷைனி அஹுஜா தன் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த பெண் வழக்கை வாபஸ் பெற்றதால் அவர் தொடர்ந்து ஜாமீனில் வெளியே உள்ளார்.
மாதுர் பந்தர்கர்
இயக்குனர் மாதுர் பந்தர்கர் பாலிவுட்டில் வளர்ந்து வந்த நடிகை ப்ரீத்தி ஜெயினுக்கு தனது படத்தில் ஹீரோயின் வாய்ப்பு அளிப்பதாக கூறி அவரை பலாத்காரம் செய்ததாக கடந்த 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.