Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
2009ல் கைதான விபச்சார வழக்கு... புவனேஸ்வரிக்கு ரூ. 3000 'ஃபைன்'!
சென்னை: விபச்சார வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கவர்ச்சி நடிகை புவனேஸ்வரிக்கு இத்தனை காலம் நடந்த விசாரணையின் முடிவில் ரூ. 3000 அபராதம் விதித்து சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்த வழக்கு 2009ம் ஆண்டிலிருந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போதுதான் அதில் தீர்ப்பு அளித்துள்ளனர்.
கவர்ச்சி நடிகை
பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை புவனேஸ்வரி. காமெடி, கவர்ச்சி, வில்லத்தனம் என பல கேரக்டர்களில் இவர் நடித்துள்ளார்.
பாய்ஸ் படத்தில்
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் இவர் விபச்சாரப் பெண் வேடத்தில் சின்ன ரோலில் வந்திருந்தார்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம்
இவரை கடந்த 2009ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி சாஸ்திரி நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வைத்துப் போலீஸார் கைது செய்தனர். அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
சைதை கோர்ட்டில்
இதுதொடர்பாக சைதாப்பேட்டை பெருநகர 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடந்தது. 6 பேர் இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டனர்.
மாஜிஸ்திரேட் சரவணன்
இந்த வழக்கில் ஒரு வழியாக நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் சரவணன் அளித்த தீர்ப்பில், புவனேஸ்வரி விபச்சாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டு நி்ரூபணமாகியுள்ளது. எனவே அவருக்கு ரூ. 3000 அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டார்.
பல சர்ச்சைகள்
விபச்சார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி அதற்குப் பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை. மேலும் வேறு சில சர்ச்சைகளிலும் சிக்கினார். மாயாஜால் போன இடத்தில் இன்னொருவரின் கார் மீது இவரது காரை மோதி சண்டையில் இறங்கினார் என்று முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.