Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகர் திலீப் வீடு- அலுவலகங்களில் வணிகவரி அதிகாரிகள் ரெய்டு- ரொக்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!
அப்போது திலீப் வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் திலீப்.
நிதி நிறுவனம்
திலீப்பின் சகோதரர் அனூர் கொச்சியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மீது தொடர் புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து நேற்று இந்த நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திலீப் வீட்டில்
அடுத்து கொச்சியில் உள்ள திலீப்பின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று வணிகவரி மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனை நடந்து கொண்டிருந்த போதே திலீப்பை உடனடியாக வணிகவரித் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு திலீப் தனக்கு சில வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது என்றும், தனக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர்.
விசாரணை
இதையடுத்து திலீப் உடனடியாக வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குத் தான் விசாரணை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது கூடியிருந்த செய்தியாளர்கள் முன்பு திலீப் பேசுகையில், "எனது வீட்டில் இருந்து ஏராளமான ரொக்கப் பணம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது.
வெறும் 350 டாலர்கள்தான்
சாலக்குடியில் நான் கட்டி வரும் தியேட்டர் செலவுக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து வைத்திருந்தேன். அதைத் தான் அதிகாரிகள் எடுத்தனர். அவர்களுக்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன். எனது மைத்துனர் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அவர் கொடுத்த 350 அமெரிக்க டாலர்களைத்தான் அதிகாரிகள் எடுத்தனர். இதுதொடர்பாகவும் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளேன்.
நான் கடந்த 18 ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போலத்தான். நான் எதையும் மறைத்தது கிடையாது," என்றார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!