Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்
சினிமாவில் பிஆர்ஓ என்பவர் யார்... ஒரு படம் அல்லது நட்சத்திரம் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லி, அவற்றை வெளியில் பிரபலப்படுத்துபவர்.
அந்த வகையியில் தமிழ் சினிமாவில் நடிகர்- இயக்குநர் பார்த்திபனை விட பலே பிஆர்ஓவைப் பார்க்க முடியாது. அவருக்கு அவரே மிகப் பெரிய பிஆர்ஓதான். அவருக்கும் அவர் படத்துக்கும் எந்த முறையில் விளம்பரம் தேடலாம் என்பதற்கு பெரிய யோசனைக் கிடங்கே வைத்திருக்கிறார் போலும்!
இந்த வாரம் முழுக்க ஏதோ ஒரு வகையில் மீடியாவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இசை வெளியீடு.. தொடர்ந்து பிரஸ் மீட்.
தொடர்ந்து வந்த நாட்களில் இயக்குநர் அமரர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் எனப் புகார். மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான்தான் முறையாக அறிமுகப்படுத்துவதாக அழைப்பிதழில் அவர் தண்டோரா போட, மணிவண்ணன் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொந்தளித்துவிட்டார்.
அதற்கு பார்த்திபன் அளித்த விளக்கத்தை சுரேஷ் காமாட்சி ஏற்றுக் கொண்டாரா.. அல்லது இன்னும் கோபப்பட்டிருப்பாரா? என்பது அவரைக் கேட்டால்தான் தெரியும்.
இதோ பார்த்திபன் விளக்கம்..
அடுத்த பிரச்சினை ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜ் வேடத்துக்கு பார்த்திபனைத்தான் முதலில் அழைத்தார்களாம். அப்போது ஷங்கரிடம், 'விஜய் வேஸ்ட்..அவருக்கு நடிப்பு வராது. சூர்யாவை நடிக்க வையுங்கள்.. ஆமீர்கான் வேடத்துக்கு பர்பெக்டாக இருப்பார்,' என்று பார்த்திபன் சொன்னதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதாம்.
அதற்கு விளக்கம் அளிப்பதாகக் கூறிக் கொண்டு, ஏதோ ஆயா வடைசுட்ட கதை என்றெல்லாம் எழுதி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.
இதோ அந்த இரண்டாவது அறிக்கை...
விளைவு.. நிகில் அனுப்பிய படத்தின் பிரஸ் ரிலீஸையும் தாண்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஏதோ ஒரு வகையில் தினசரி பார்த்திபன் செய்தியைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறது மீடியா.
இப்போ சொல்லுங்க... பார்த்திபன் பெரிய பிஆர்ஓதானே!
குறிப்பு: பார்த்திபன் சார்.. உங்க அறிக்கையின் நக்கல் தொனி யாருக்கும் புரியாமலில்லை... அதற்காக விளக்க அறிக்கைகளைக் கூட கிறுக்கல்கள் மாதிரியே பிழைகளோடு எழுதுவதைத் தவிருங்களேன்!