Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை ஸ்ரீதேவியின் வீட்டில் தீ: ஹோட்டலில் இரவை கழித்த குடும்பத்தார்
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மும்பை வீட்டில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியாருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவியின் வீட்டில் திடீர் என்று தீப்பிடித்தது. அவரது படுக்கை அறையில் மின்கசிவு ஏற்பட்டது தான் தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஸ்ரீதேவியின் படுக்கை அறை எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் ஸ்ரீதேவி, அவரது மகள்கள் மற்றும் மாமியார் இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதற்கிடையே ஸ்ரீதேவியின் மாமியார் போனி கபூரின் தம்பி சஞ்சய் கபூர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்ரீதேவியின் குடும்பத்தார் நேற்றை இரவை ஹோட்டலில் கழித்தனர்.