Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடனை கொடுக்கவில்லை: ஏலத்திற்கு வரும் கௌதம் மேனன் சொத்துக்கள்
சென்னை: வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் இயக்குனர் கௌதம் மேனனின் சொத்துக்கள் ஏலத்திற்கு வருகிறது.
காக்க காக்க, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். அவர் சொந்தமாக பட நிறுவனம் துவங்கினார். அந்த நிறுவனம் மூலம் நடுநிசி நாய்கள், வெப்பம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை.
இந்நிலையில் அவருக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் இடையே பணப் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து குமார் நீதிமன்றம் வரை சென்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கௌதம் மேனனின் சொத்துக்களை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.
கௌதம் மேனன் தனக்கு சொந்தமாக இந்திரா நகர் முதல் மெயின் ரோட்டில் 7 ஆயிரத்து 91 சதுர அடியில் உள்ள சொத்தை அடமானம் வைத்து தான் கடன் பெற்றாராம். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது சொத்தை வங்கி ஏலத்தில் விடுகிறது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.12.26 கோடி ஆகும்.
கௌதம் அஜீத் குமாரை வைத்து படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.