Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!
சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -23) இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு இடங்களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன.
இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி இளையராஜா ஓய்வெடுத்தார்.
இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வீடு திரும்பினார்.
மலேசியாவில் இன்று மாலை நடக்கும் கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது. உடல்நிலை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ கான்பரென்சிங் முறையில் திரையில் தோன்று ரசிகர்களுடன் பேசுகிறார் ராஜா. சில வாரங்கள் கழித்து நேரில் சென்று மலேசிய மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம்.